மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க உள்ள ரம்பா...! யாரும் செய்யாத செயலை செய்த கணவர்..! புகைப்படம் உள்ளே..!
90-களில் தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவர் தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
90-களில் தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவர் தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவித்து விட்ட ரம்பா, ஒரு சில சின்னத்திரை நடன நிகழ்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் ரம்பாவுக்கு லான்யா, ஷாஷா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் மூன்றாவது முறையாக தற்போது ரம்யா மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
கணவர் பத்மநாதனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று, பின் மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால், மூன்றாவதாக பிறக்க போகும் குழந்தைக்காக ரம்பாவுக்கு வளைகாப்பு செய்து அழகு பார்த்துள்ளார் ரம்பாவின் கணவர்.
பொதுவாக முதல் குழந்தைக்கு வளைகாப்பு நடத்துவது வழக்கம், ஆனால் இவர் மூன்றாவது குழந்தைக்கு வளைகாப்பு செய்துள்ளது இதுவரை யாரும் செய்யாத செயலாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் வளைகாப்பு போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.