ஆடை இல்லாமல் பீட்சா சாப்பிடும் பிரபல எழுத்தாளரின் முன்னாள் மனைவி…. சென்னை பெண்ணின் அதிரி புதிரி கவர்ச்சிப்படம்….
தமிழகத்தைச் சேர்ந்த நடிகையும், பிரபல எழுத்தாளர் சாலமன் ருஷ்ட்டியின் முன்னாள் மனைவியுமான பத்ம லட்சுமி தனது வீட்டு குளியலறையில் உள்ள பாத் டப்பில் ஆடையின்றி படுத்துக்கொண்டு பிட்சா சாப்பிடுவது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பத்ம லட்சுமி. இந்தி மற்றும் ஆங்கிலப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ந்து லண்டனில் செட்டில் ஆன இந்திய வம்சாவளி எழுத்தாளரான சாலமன் ருஷ்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சாலமன் ருஷ்டி த சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகத்தை எழுதியதற்காக பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் உள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணமாக சில ஆண்டுகளிலேயே பிரிந்து சென்றதோடு மட்டுமல்லாமல் விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து பத்ம லட்சுமி அமெரிக்க குடியுரிமை பெற்று தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
அங்கு பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சிப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, வைரலாகி வருகிறது.
பத்ம லட்சுமி தனது வீட்டு பாத்ரூமில் ஆடையின்றி படுத்துக் கொண்டு பிட்ஸா உன்றை கடித்தபடி போஸ் கொடுத்துள்ளார். அதிக அளவு கவர்ச்சியாக உள்ள அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.