அட்டக்கத்தி நந்திதாவுக்கு ஏற்பட்ட சோகம்… திரையுலகம் ஷாக்
அட்டக்கத்தி நந்திதாவுக்கு ஏற்பட்ட சோகம்… திரையுலகம் ஷாக்
சென்னை: பிரபல நடிகை நந்திதாவின் தந்தை திடீரென மரணம் அடைந்த தகவல் அறிந்த திரையுலகம் சோகத்தில் மூழ்கி உள்ளது.
தமிழ் திரையுலகில் அட்டகத்தி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை நந்திதா ஸ்வேதா. நம்ம பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் அவரது நடிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்று சொல்லலாம். அதன் பின்னர் சில படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினாலும்.. ஏனோ பெரிய வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
ஆனாலும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் அவர் வெளியிட்டு உள்ள செய்தி திரையுலகை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தமது தந்தை சிவசாமி 54 வயதில் காலமாகி விட்டதாகவும், அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். அவரது டுவிட்டரை கண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டு உள்ளார். திரையுலகின் மற்ற பிரபலங்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.