Asianet News TamilAsianet News Tamil

கொரோனா குணமாவதற்கு முன்பே மருத்துவமனையில் இருந்து குடும்பத்தோடு சென்ற நடிகையால் பரபரப்பு!

பாலிவுட்டில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்தவர் மோகனா குமாரி சிங். அதன் பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், ஃபியார் ஃபைல்ஸ், சில்சிலா பியார் கா, பியார் துனே க்யா கியா உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.

actress mohana kumara singh discharged the hospital corona fully cured
Author
Chennai, First Published Jun 15, 2020, 6:48 PM IST

பாலிவுட்டில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்தவர் மோகனா குமாரி சிங். அதன் பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், ஃபியார் ஃபைல்ஸ், சில்சிலா பியார் கா, பியார் துனே க்யா கியா உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக ஆரம்பத்தில் அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

actress mohana kumara singh discharged the hospital corona fully cured

தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் மோகனா குமாரி சிங், டேராடூனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகனாவின் மாமியாருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகை மோகனா குமாரி சிங் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

actress mohana kumara singh discharged the hospital corona fully cured

இதையடுத்து குடும்பத்தினர் 5 பேரும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்துள்ள மோகனா குமாரி  சிங், நாங்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் இருந்தோம். ஆனால் எங்கள் மைத்துனரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது எனக்கூறியுள்ளார். 

இந்நிலையில் இவர்களுடைய குடும்பத்தினர் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கொரோனா நெகடிவ் என வருவதற்கு முன்பே மருத்துவமனையில் இருந்து கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

actress mohana kumara singh discharged the hospital corona fully cured

இதனை மோகனகுமாரி சிங் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்தார். அதில் அவர், ‘நாங்கள் இப்போது வீட்டுக்கு திரும்பி விட்டோம் என்றாலும் வீட்டிலேயே நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கின்றோம். நாங்கள் 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்தோம். 5 நாட்கள் வரை எங்கள் உடலில் கொரோனா வைரஸ் இருந்திருக்கலாம் ஆனால் தற்போது நாங்கள் நலமாக இருக்கிறோம் என்றும், இருப்பினும் இன்னும் சில நாட்களில் நாங்கள் இதிலிருந்து முழுமையாக குணமாகி விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். அரசு விதிகளை மீறுவது போல், கொரோனா முழுமையாக சரியாகும் முன்பே இந்த நடிகை இப்படி செய்துள்ளது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios