actress mamtha drugs issue

கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் எஃபிட்ரைன் ஊக்க மருந்து கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2000 கோடி என்று கூறப்பட்ட நிலையில்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் பிரபல நடிகை மம்தா குல்கர்னி முக்கிய குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டு அவர் மேல் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் கென்யாவில் நடந்த போதை கும்பலுடனான சந்திப்பில் மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி, அவரது தொழில்முறை நண்பர் டாக்டர் அப்துல்லா, ஏவான் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோ ஜெயின், ஜெய் முகி ஆகியோர் பங்கேற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் தற்போது நடிகை மம்தா குல்கர்னி மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாடலான இவர் பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.