பிரதமர் மோடியை நடிகை கவுதமி சந்தித்த இரண்டு நாட்களில் கமலை பிரிவதாக அவர் அறிவித்தது பெரும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இதுகுறித்து தற்போது கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கவுதமி, 'பிரிவு எல்லோருக்கும் நிகழ்ந்து விடும். அதனால் இது ஏற்கெனவே எடுத்த முடிவு தான் என்றும்.
ஆனால் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன். இரண்டையும் தொடர்புப் படுத்த வேண்டாம்' என்று கூறியுள்ளார்.
மேலும் ஸ்ருதி, அக்ஷராவுக்கும் என் முடிவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் அவர்களுக்கு எப்போதும் நான் பக்கபலமாக இருந்துள்ளதால் கருத்துவேறுபாடுக்கு இடமே இல்லை என்றும் கூறினார்.
