Asianet News TamilAsianet News Tamil

அடங்காத விஷால்! நடிகர் சங்க விவகாரத்தில் அடுத்த அதிரடி!

நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வந்த பாண்டவர் அணியின் பதவி காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த வருடம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. 
 

actor vishal filed the high court for nadigar sangam issue
Author
Chennai, First Published Feb 10, 2020, 12:00 PM IST

நடிகர் சங்கத்தில் பதவி வகித்து வந்த பாண்டவர் அணியின் பதவி காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த வருடம் ஜூன் மாதம் 23 ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. 

இதில், மீண்டும் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் போட்டியிட்டனர் அவர்களை எதிர்த்து, பாக்யராஜ் தலைமையில் 'சுவாமி சங்கரதாஸ்' அணியினர் களம் கண்டனர்.  

actor vishal filed the high court for nadigar sangam issue

மேலும் தேர்தலின் போது காரணமின்றி சில உறுப்பினர்களை, நடிகர் சங்கத்தில் இருந்து தூக்கியதாக குற்ற சாட்டுகள் எழுந்தது. அதே போல் வெளியூரில் இருக்கும் நாடக நடிகர்களுக்கு தபால் ஓட்டுகள் வந்து சேரவில்லை என்றும், ஓட்டு போட நேரடியாக வந்த போது, அவர்கள் ஓட்டு போட மறுக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என, அறிவிக்க கூறி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

actor vishal filed the high court for nadigar sangam issue

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதி மன்றம், இந்த தேர்தல் செல்லாது என தீர்ப்பு வழங்கியது. எனவே விரைவில் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே இந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், சற்றும் அடங்காத நடிகர் விஷால், அதிரடியாக நடிகர் சங்க தேர்தல் பற்றி உயர்நீதி மன்றத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளார்.

actor vishal filed the high court for nadigar sangam issue

இதில் ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க வேண்டும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். ஜூன் 23 ஆம் தேதி நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது குறித்தும் நடிகர் விஷால் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios