நடிகர் விமல், தன்னை பற்றி தவறான தகவல்கள் பரவி வருவதாக கூறி விளக்கம் கொடுத்துள்ளார். 

நடிகர் விமல், தன்னை பற்றி தவறான தகவல்கள் பரவி வருவதாக கூறி விளக்கம் கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ, பணம் பரிமாற்றமோ இல்லை. என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு, மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பரிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் மூலமாகவோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.