ரஜினியை உயரமாக தூக்கி கீழே போட்ட டி.ஆர்...!! எப்படி சார் உங்களால மட்டும் சிரிக்காம நக்கல் பண்ண முடியுது...!!
பாகுபலி என்ற படம் பிரமாண்ட வெற்றி பெற்றது அந்த படத்தின் டிக்கெட 50 , 100 கொடுத்துதான் மக்கள் படத்தைப் பார்த்தனர் . யாரும் ஆயிரம் ரூபாய்கெகொல்லாம் வாங்கவில்லை
பாகுபலி வசூலிக்கும் போது தர்பார் வசூலிக்காதா என நடிகர் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார், தர்பார் பட டிக்கெட் விலை ஏற்றம் தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு அளித்த பதிலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்ட பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிராஜேந்தர் வெற்றி பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , பல்வேறு கேள்விகளுக்கு அவரது பாணியில் சூடாகவும் சுவையாகவும் பதில் அளித்தார்.
அப்போது அவரிடம் தர்பார் பட டிக்கெட் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர் அப்போது பேசிய அவர் , " இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது ஆனால் கருத்து சொல்கிறேன் அதிலிருந்து நீங்களே பதிலை கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்" பாகுபலி என்ற படம் பிரமாண்ட வெற்றி பெற்றது அந்த படத்தின் டிக்கெட 50 , 100 கொடுத்துதான் மக்கள் படத்தைப் பார்த்தனர் . யாரும் ஆயிரம் ரூபாய்கெகொல்லாம் வாங்கவில்லை , ஆனால் பல கோடி வசூல் சாதனை புரிந்தது, ஒரு படம் எந்த மொழியில் எடுக்கப்படுகிறது என்று என்பது முக்கியமல்ல அதிலுள்ள பிரம்மாண்டம்தான் காரணம் என்றார்.
ரஜினி சார் ஒரு சூப்பர்ஸ்டார் அந்த இடத்திற்கு வர அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டு உள்ளார் , கமல் , அஜித் , விஜய் , என எல்லோருமே அப்படித்தான் இவர்களுடைய படத்துக்கும் மற்ற நடிகர்கள் படத்துக்கும் ஒரே டிக்கெட் விலையை கொடுங்கள் என்றால் மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் . இதுவரை தர்பார் இரண்டு திரையரங்குகளில் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது , அதற்குள்ளாக 1500 க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்று எப்படி சொல்கிறீர்கள் அந்த படத்தின் வியாபாரம் இன்னும் முடியவில்லை என்றார்.