Asianet News TamilAsianet News Tamil

ஹீரோவாக நியூ லுக்கில் காமெடி நடிகர் செந்தில் நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு.!

காமெடி நடிகர் செந்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக  படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
 

actor senthil movie wrapped
Author
Chennai, First Published Mar 18, 2021, 5:55 PM IST

காமெடி நடிகர் செந்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக  படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. இந்த படத்தில் ஹீரோவாக விதார்த் நடித்திருந்தார். ஹீரோயினாக டப்பிங் கலைஞர் ரவீனா நடித்திருந்தார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டும் இன்றி பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது.

actor senthil movie wrapped

இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் பிரேம்ஜியை வைத்து 'சத்தியசோதனை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்தும் பணிகளும் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.  post-production பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு படம் ரிலீசாகவும் தயாராக உள்ளது.

actor senthil movie wrapped

இந்த படத்தை முடித்த கையோடு பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே காமெடி நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். கிராமப்புறங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தொடங்கிய வேகத்தில் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும் விரைவில் post-production பணிகள் துவங்க உள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் வெளியிட்டு உள்ளனர் . குறிப்பாக நடிகர் செந்தில் இந்த படத்தில் நியூ லுக்கில் நடித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios