Asianet News TamilAsianet News Tamil

சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்பவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளுக்கு அதை செய்யுங்கள் - ரஞ்சித் ஆவேசம்

நாடக காதலை எதிர்ப்பதால் தன்னை சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் என நடிரும் இயக்குநருமான கொங்கு ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.

actor ranjith did special prayer at koniamman temple in coimbatore vel
Author
First Published Jun 22, 2024, 6:16 PM IST | Last Updated Jun 22, 2024, 6:16 PM IST

நடிகர் கொங்கு ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ரஞ்சித் மற்றும் பட குழுவினர் கோவை கோனியம்மன் திருக்கோவிலில்  திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித், "கவுண்டம்பாளையம்" திரைப்படம் வருகிற ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 200 திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளதாகவும் கூறினார்.

நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக தான் இயக்கியும், நடித்தும் உள்ளதாகவும் கோவை பகுதியை சுற்றி இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீரை  மையப்படுத்தி, பணக்கார பிள்ளைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நாடகக் காதல் தான் இது எனவும் குறிப்பிட்டார். இன்றைய கால கட்டத்தில் வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்து உள்ளது. 

நடிகர் விஜய் பிறந்தநாள்; மதுரையில் கைவிடப்பட்ட நாய்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்

சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்து விட்டு மற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு பதில் அவர்களுடன் சேர்த்து வைத்து அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாம். 

திருச்சியில் 250 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு; நள்ளிரவில் அதிரடி காட்டிய ஆட்சியர்

நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். நாடக காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான். படத்தில் இடம்பெற்று உள்ள மாட்டிறைச்சி வசனம் குறித்த கேள்விக்கு  நாய், பன்றி, காக்கா, பொங்கல் உள்ளதா??? மாடுகள் தெய்வமாகவும், விவசாயத்திற்கு காலம் காலமாக பக்கபலமாக உள்ளது என்பதில் தான் மாட்டுப் பொங்கலுக்கு அரசு விடுமுறை அளித்து கொண்டாடுகிறோம். எனவே மாட்டை தெய்வமாக வழிபடுவதால் அது தொடர்பான வசனங்கள் இடம் பெற்று உள்ளது. 

தனக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் தனக்கான இருக்கையை பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்து உள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா?? நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும் என வலியுறுத்திய ரஞ்சித், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக  வைத்து தான் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர். விவசாய தற்கொலைகளுக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை எனவும் விமர்சித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios