Asianet News TamilAsianet News Tamil

Iravin nizhal: மேடையில் மைக்கை தூக்கி வீசிய பார்த்திபன்...அதிர்ச்சியில் உறைந்து போன ஏ. ஆர் ரகுமான்...

Iravin nizhal: ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர் ரகுமான் முன்பு நடிகர் பார்த்திபன் மேடையில் கோபப்பட்டு  மைக்கை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.  

Actor Parthiban got angry at Iravin nizhal teaser function
Author
Chennai, First Published May 2, 2022, 11:31 AM IST

ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர் ரகுமான் முன்பு நடிகர் பார்த்திபன் மேடையில் கோபப்பட்டு  மைக்கை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.  

ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு,  இயக்குநர் பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இந்த படம் 96 நிமிடங்கள் ஓடக்கூடியது. இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். 

Actor Parthiban got angry at Iravin nizhal teaser function

நட்சத்திர பட்டாளங்கள்:

இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்த்து ஆஸ்கர் விருது பெற்ற 3 பேர் பணியாற்றியுள்ளனர். இப்படம் ரீலீசுக்கு தயாராகி வருகிறது. பார்த்திபன் இயக்குகத்தில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. 

Actor Parthiban got angry at Iravin nizhal teaser function

ஏ.ஆர்.ரஹ்மான்:

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.  அப்போது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர்  ஏ. ஆர் ரகுமான்  மற்றும் பார்த்திபன் பேசி கொண்டிருந்தனர். இது குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும் என்றார்.

Actor Parthiban got angry at Iravin nizhal teaser function

மைக்கை தூக்கி வீசிய பார்த்திபன்:

இதையடுத்து பார்த்திபன் பேசும் போது, திடீரென பார்த்திபன் மைக் வேலை செய்யாமல் போனதால், கடும் கோபமடைந்த அவர் மைக்கை தூக்கி வீசினார். அதன் பின் தன்னுடைய செயல் அநாகரீகமானது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

தேசிய விருது கிடைக்குமா?

Actor Parthiban got angry at Iravin nizhal teaser function

இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார். முன்னதாக, பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக உருவான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில்,  இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 மேலும் படிக்க....ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இரவின் நிழல்.. பிரம்மிப்பூட்டும் டீசர் - ‘ஆஸ்கர்’ கன்பார்ம் என பாராட்டும் ரசிகர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios