கோலிவுட்டில் 90களில் கொடி கட்டி பறந்த கதாநாயகர்களில் ஒருவர் மைக் மோகன். இன்று வரை பலரும் இவரது பாடலுக்கு அடிமைதான்.

ஆனால் தீடீர் என ஏற்பட்ட எய்ட்ஸ் புரளி இவரில் சினிமா சாம்ராஜியத்தையே அடியோடு அழித்து விட்டது.

காரணம் அப்போது எல்லாம் எய்ட்ஸ் நோயாளியை பார்த்தால் தெறித்து ஓடும் நிலை தான் இருந்தது. இவருக்கும் எய்ட்ஸ் இருக்கிறது என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்க பட்டதால்.

இவருக்கு நடிக்கும் வாய்ப்பை யாரும் கொடுக்கவில்லை, அக்கம் பக்கத்தில் இருந்த இயக்குனர்களில் இருந்து பலரும் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்த்தனர்.

இதை கண்ட மோகன் யாருக்கும் தொந்தரவாக இருக்க கூடாது என்று, வீட்டை விற்று விட்டு சென்றுவிட்டார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த கேள்வியை எழுப்பியபோது இதற்கு பதில் அளித்த நடிகர் மோகன், 90 களில் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தன்னிடம் காதலை சொல்லி , திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.

ஆனால் அதற்கு நான் ஒற்று கொள்ளாததால், இனி உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ளாதது போல் செய்கிறேன் என்று கூறி.

 இப்படி ஒரு புரளியை கிளப்பிட்டார், அதை நான் எவ்வளவு மறுத்தும் நம்பும் நிலையில் யாரும் இல்லை ஆனால் இன்று வரை தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.

எய்ட்ஸ் புரளியால் இன்று நல்ல நிலைக்கு வரவேண்டிய மோகன் வாய்ப்புகள் இன்றி ஓரங்கட்டப்பட்டது பரிதாபமே