Asianet News TamilAsianet News Tamil

மன்சூர் அலிகானுக்கு அறுவை சிகிச்சை... கொரோனா ரிசல்ட் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்...!

சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

actor Mansoor Ali Khan underwent surgery
Author
Chennai, First Published May 10, 2021, 3:06 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அதற்கு முதல் நாள் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தார். எனவே விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்பது போல் மன்சூர் அலிகான் அளித்த அவதூறு பேட்டி சர்ச்சையைக் கிளப்பியது. 

actor Mansoor Ali Khan underwent surgery

இதையடுத்து மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மன்சூர் அலிகானுக்கு சமீபத்தில் தான் நிபந்தனை ஜாமீன்  வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

actor Mansoor Ali Khan underwent surgery

சிறுநீரக கல் பிரச்சனை காரணமாக சென்னை அமைந்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய சிறுநீரக கல்லை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து மன்சூர் அலிகானுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. a

Follow Us:
Download App:
  • android
  • ios