சினிமா படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் கை உடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த உடைந்த கையுடன் நடிகை அமலா பால் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அமலா பாலின் இந்த சேவையை அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
கேரளாவில்கடந்தமேமாதம் 29-ந்தேதிதொடங்கியதென்மேற்குபருவமழைகடந்த 8-ந்தேதிமுதல்தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும்இடைவிடாதுபெய்துவரும்மழையால்மாநிலம்முழுவதும்வெள்ளநீரில்மிதக்கிறது. அணைகளின்நீர்ப்பிடிப்புபகுதிகளில்தொடர்ந்துகனமழைபெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும்நிரம்பிஉள்ளன.
இடுக்கி, வயநாடு, மலப்புரம்போன்றமலைப்பாங்கானமாவட்டங்களில்தொடர்ந்துஏற்படும்நிலச்சரிவால், எங்குபார்த்தாலும்சேறும்சகதியுமாகவேகாணப்படுகிறது.

கொச்சிவிமானநிலையத்தில்தேங்கியுள்ளவெள்ளம்வடியாததால், 26-ந்தேதிவரைமூடப்படுவதாகஅறிவிக்கப்பட்டுஉள்ளது. கேரளாவில்கோரத்தாண்டவம்ஆடிவரும்இரண்டாம்கட்டபருவமழைக்குஇதுவரை 324 பேர்உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்கலால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆயியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன் மற்றும் சிவ கார்த்திகேயன்10 லட்சம் ரூபாயும். நடிகை ஸ்ரீபிரியா, ரோகினி, நயன்தாரா தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரணத்துக்கு அளித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை அமலா பால் சற்று வித்தியாசமாக நிவாரணப் பொருட்களை வாங்கி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்.

நடிகைஅம்லாபால்ஏற்கனவே படப்பிடிப்பில்ஏற்பட்டவிபத்தில், கைஉடைந்துசிகிச்சைப்பெற்றுவருகிறார். இதனிடையே, கேரளாவில்வெள்ளப்பாதிப்புமோசமடைந்ததையடுத்து, அவர்உடைந்தஅந்த கையுடன் முடிந்தநிவாரணப்பணிகளில்ஈடுபட்டுவருகிறார்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி லாரியில் ஏற்றிச் சென்று நிவாரண முகாம்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் நேரில் சென்று தனது கைகள் உடைந்ததையும் பொருட்படுத்தாது வழங்கி வருகிறார்.
அமலா பாலின் இந்த சேவையை கலைத்துறையினரும், பொது மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்
