Asianet News TamilAsianet News Tamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா..! அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..!

கொரோனா தொற்றால் பிரபல தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே, சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

actor alluarjun corona get positive fans shocking
Author
Chennai, First Published Apr 28, 2021, 12:05 PM IST

கொரோனா தொற்றால் பிரபல தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே, சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

actor alluarjun corona get positive fans shocking

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், அல்லு அர்ஜுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்... " கொரோனா பரிசோதனை செய்தபோது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.

actor alluarjun corona get positive fans shocking

அதே போல் என்னிடம் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டு வீட்டிலேயே அனைவரும் பத்திரமாக இருங்கள். அதே போல் என்னுடைய நலம் விரும்பிகள், ரசிகர்கள் யாரும் கவலை பட வேண்டாம் நான் நலமுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான், பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பதாக அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு பிரபலமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, நாளுக்கு நாள் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை காட்டுகிறது.

actor alluarjun corona get positive fans shocking

எனவே, மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி... தடுப்பூசி செலுத்தி கொண்டு, வெளியில் சென்றால், சுகாதாரத்துடன், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தால் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். என மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
 

Follow Us:
Download App:
  • android
  • ios