பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், தன்னுடைய கடைசி படம் குறித்தும் தான் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளது பற்றியும் பேசி உள்ளார்.

Aamir Khan Retirement Plans : பாலிவுட்டின் மிஸ்டர் பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் அமீர்கான் தற்போது தனது வரவிருக்கும் படமான 'தாரே ஜமீன் பர்' படத்தின் விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், 'தாரே ஜமீன் பர்' படத்தைத் தொடர்ந்து 'மகாபாரதம்' படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்தார். இது மிகப்பெரிய புராஜெக்டாக இருப்பதால், இதுவே அவரது கடைசி படமாகவும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இதனால் அமீர்கானின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

அமீர்கானின் கடைசி படம் எது?

அந்த பேட்டியில் அமீர்கான் பேசியதாவது : “இது பல அடுக்குகளைக் கொண்டது, உணர்ச்சிமயமானது, பிரம்மாண்டமானது, உலகில் நீங்கள் காணும் அனைத்தும் மகாபாரதத்தில் உங்களுக்குக் கிடைக்கும்” என்று அமீர்கான் கூறினார். தான் எப்போதுமே உயிர்ப்பிக்க விரும்பிய கதை 'மகாபாரதம்' என்றும் அவர் கூறினார். நடிகர் அமீர்கான் தற்போது ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

அவரது கடைசி படம் குறித்து கேட்டபோது, “இதைச் செய்த பிறகு, எனக்கு வேறு எதுவும் செய்ய இல்லை என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் உள்ளடக்கம் அப்படித்தான் இருக்கும் என்பதால், இதற்குப் பிறகு நான் எதுவும் செய்ய முடியாது. நான் வேலை செய்து கொண்டே இறக்க விரும்புகிறேன், ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் என்பதால், இதைத்தான் நான் யோசிக்க முடியும். இதற்குப் பிறகு எனக்கு வேறு எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

அமீர்கான் கைவசம் உள்ள படங்கள்

அமீர்கான் கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அவரது வரவிருக்கும் படத்தைப் பற்றிப் பேசுகையில், அவர் விரைவில் 'தாரே ஜமீன் பர்' படத்தில் தோன்றுவார். இது ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். இந்தப் படத்தில் அமீர்கானுடன் ஜெனிலியா தேஸ்முக் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து ‘ஹேப்பி படேல்’, ‘சார் தின் கி சாந்தினி’, ‘மகாபாரதம்’ ஆகிய படங்களுடன், ஜோயா அக்தரின் ஒரு படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரின் இந்த அறிவிப்பு பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.