15 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது..! மனைவி கிரண் ராவ்வை விவாகரத்து செய்யும் அமீர் கான்!
பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னுடைய மனைவி கிரண் ராவ்வை விவாகரத்து செய்ய உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அமீர் கான் - கிரண் தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இவர்களுக்கு, ஆசாத் ராவ் கான் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.
பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னுடைய மனைவி கிரண் ராவ்வை விவாகரத்து செய்ய உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அமீர் கான் - கிரண் தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இவர்களுக்கு, ஆசாத் ராவ் கான் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.
இதுகுறித்து அமீர் கான் மற்றும் கிரண் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த 15 ஆண்டுகளில் நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் மிகவும் அற்புதமான அனுபவங்களை பெற்றுள்ளோம், மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு என பலவற்றை பகிர்ந்து கொண்டோம். எங்கள் உறவு நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பில் மட்டுமே வளர்ந்துள்ளது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பக்கத்தை தொடங்க விரும்புகிறோம். இனி கணவன்-மனைவியாக அல்ல, ஆனால் இணை பெற்றோர் மற்றும் ஒரு குடும்பமாக. ”
“நாங்கள் எங்கள் மகன் ஆசாத்துக்கு பெற்றோர்களாக இருப்போம். ஒன்றாக இணைந்து வளர்ப்போம். அதே போல் திரைப்படங்கள், பானி அறக்கட்டளை மற்றும் பிற திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாகவே இணைந்து பணியாற்றுவோம். ” என தெரிவித்துள்ளனர்.
எங்கள் இந்த முடிவுக்கு ஆதரவு கொடுக்கும் எங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. இதை விவாகரத்து முடிவாக பார்க்காமல் , எங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள் என்று நம்புகிறோம் என்று இருவரும் கையெழுத்து போட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
‘லகான்' படத்தில் அமீர் கான் நடித்த போது, அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவ்விற்கும், அமீர் கானுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் சில காலம் இருவரும் டேட்டிங் செய்த நிலையில், காதல் விவகாரம் வெளியே கசிய துவங்கியதும், டிசம்பர் 28, 2005 அன்று முறையாக திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரண் ராவ்வை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அமீர் கான் ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். 16 வருட திருமண உறவை இவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முறித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.