a story is there on behalf of surya nad vijays achievement and what director vikraman did
நடிகர் விஜய் இன்று கொடி கட்டி பறப்பதற்கு காரணம் டைரக்டர் விக்ரமனும் ஒரு காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த படத்தில்மட்டும் நடித்து வந்த விஜய்க்கு அப்படி ஒன்னும் எந்த படமும் ஹிட் அடிக்கவில்லை என்பது உண்மை....பின்னர் பூவே உனக்காக படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் டைரக்டர் விக்ரமன்....
இந்த படத்திற்கு பிறகுதான் விஜய்க்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்றே கூறலாம்...பின்னர் அதிக அளவில பல காதல் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து விஜய் புகழின் உச்சிக்கு சென்றார்
பூவே உனக்காக படம் நல்ல வெற்றி படமாக அமைந்ததால்,மீண்டும் விஜய் நடிப்பிலேயே அவருக்கு ஏற்ற கதை அம்சத்துடன் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்த விக்ரமன்....படத்திற்கு “உன்னை நினைத்து” என்ற டைட்டல் வைத்தார்.
இதற்கான போட்டோ சூட்கூட முடிந்து,முதல் நாள் சூட்டைவெற்றிகரமாக முடித்த கையோட, படத்தை விட்டு விலகினார் விஜய் அதற்கான காரணத்தை இதுவரை தெரியபடுத்தவில்லையாம்....
வாய்ப்பை பயன்படுத்திய சூர்யா
இன்று உண்மையான சிங்கம் போன்ற தோற்றத்துடன் படங்களில் பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் சூர்யா,உன்னை நினைத்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
சூர்யா நடிப்பில் வெளிவந்த இந்த படம்,மாபெரும் வெற்றியை கொடுத்தது...அதன்பின் சூர்யாவும் திரை உலகில் கொடிகட்டி பறக்க தொடங்கியவர் தான்....இப்போது வரை.....அல்டிமேட்டாக இருக்கிறார்....
இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்றால்,வாய்ப்புகள் யாருக்கு எப்படி வரும் என்று தெரியாது..ஆனால் வரும் போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே....
