நடிகர் "சஞ்சய் தத்துக்கு" உயில் எழுதி உயிரை விட்ட தீவிர ரசிகை...! சொத்து முழுதும் இப்ப யாருக்கு தெரியுமா ..?
பிரபல நடிகருக்கு உயில் எழுதி உயிரை விட்ட தவிர ரசிகை...! சொத்து முழுதும் இப்ப யாருக்கு தெரியுமா ..?
நடிகர் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும்...
மற்ற துறையில் என்னதான் பெரிய அளவில் இருந்தாலும்,சிமி பிரபலம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு தான் அதிக ரசிகர்கள்...
அந்த வகையில்,ரசிகை அல்லது ரசிகன் என்ற பெயரில் நடிகர் நடிகைகளுக்கு சிலை கூட வைத்து உள்ளனர்...
இந்நிலையில்,சமீபத்தில் பாலுவுட் நடிகர் சஞ்சய் தத் மீது அதிக பாசம் கொண்ட தீவிர ரசிகை ஒருவர் தன்னுடைய முழு சொத்தையும்,சஞ்சய் தத் பெயரில் உயில் எழுதிவிட்டு இறந்துள்ளார்
சஞ்சய் தத் ரசிகை நிஷி
மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திரா திரிபாதி என்கிற பெண் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை.
மும்பையில் வசித்து வந்த இவர்,சில காலமாக நோய்வாயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.இவருடன் இவற்றின் தாய் வசித்து வந்துள்ளார் .
ஒரு கட்டத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் நிஷி.
வங்கி லாக்கர்
பின்னர் நிஷியின் வங்கி கணக்கு மற்றும் லாக்கரை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், உயிலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்."அதில் தன்னுடைய சொத்து முழுதும்,நடிகர் சஞ்சய் தத்துக்கு தான் செல்ல வேண்டும் என தெரிவித்து உள்ளார்
குடும்பத்திடமே ஒப்படைத்த சஞ்சய் தத்
வங்கி அதிகாரிகள் இந்த தகவலை சஞ்சய் தத்துக்கு தெரிவிக்க இப்படி ஒரு ரசிகையா என நெகிழ்ந்து போனாராம்..அந்த சொத்துக்களையும் அவருடைய குடும்பத்தினரிடமே ஒப்படைக்குமாறு தெரிவித்து உள்ளார் சஞ்சய் தத்