Asianet News TamilAsianet News Tamil

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மணடலத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2022 for clerk and assistant posts
Author
First Published Sep 10, 2022, 2:08 PM IST

நிறுவனத்தின் பெயர்: Perambalur Civil Supplies Corporation

காலி பணியிடங்கள் : 28

பணியின் பெயர்:  

பட்டியல் எழுத்தர் - 07

உதவுபவர்- 14

காவலர் - 09

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!

அனுப்ப வேண்டிய முகவரி: 

துணை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம், 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 
துறை மங்கலம்  

கல்வித் தகுதி: 

பட்டியல் எழுத்தர் : அரசு அல்லது அரசால அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி (அறிவியல்)/ பி.இ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவுபவர்:  இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். 

காவலர்: 8 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் - 37ஆகவும், பிசி/ எம்பிசி/பிசி(இஸ்லாம்) பிரிவினர் - 34 ஆகவும் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

பட்டியல் எழுத்தர்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.5285 + ரூ.3499 சம்பளமாக வழங்கப்படும். 

உதவுபவர் - ரூ.5218 + ரூ.3499/-

காவலர் -  ரூ.5218 + ரூ.3499/-

மேலும் படிக்க:படித்த முடித்தவுடன் ஸ்டார் ஹோட்டலில் வேலை.. 100% வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு.. தாட்கோ கழகம் முக்கிய அறிவிப்பு


 

Follow Us:
Download App:
  • android
  • ios