சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் காலியாக உள்ள ஒதுவார் பணியிடத்த நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பணியின் பெயர் : ஓதுவார்

ஊதியம் : ரூ.12,600 – 39,000

கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் சமய, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாட சாலையில் 3 ஆண்டுகள் பயின்றதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்

இதையும் படிங்க : Gold Rate Today : நீண்ட நாள் கழித்து மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மூலம் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உடையவர்கள், கோயில் நிர்வாகத்திடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை,, முன்னுரிமைக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 06.06.2023 மாலை 5.45 மணிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்

மேலும் விவரங்க்ளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க : குட்நியூஸ்! இனி வாட்ஸ் அப்-லேயே மெட்ரோ ரயில் டிக்கெட் பெறலாம்.. எப்படி தெரியுமா?