share market today: மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் சுறுசுறுப்புடன் பங்குகளை கைமாற்றி வருகிறார்கள்.

மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் சுறுசுறுப்புடன் பங்குகளை கைமாற்றி வருகிறார்கள்.

குறையும் போர் பதற்றம்

சர்வதேச காரணிகள் சாதகமாக அமைந்திருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, குறிப்பாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரம் குறைந்து பேச்சு வார்த்தைக்கு இருதரப்பும் முன்வந்துள்ளது போர் முடிவுக்கு உருவதை உணர்த்தியுள்ளது. கீவ் பகுதியில் முன்னேறிய ரஷ்ய ராணுவத்தினரை திரும்புமாறு ரஷ்யா உத்தரவிட்டதால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு, போர் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்து, மீண்டும் உலக பொருளாதாரம் இயல்புக்கு வரும் என்று நம்பியதால் உற்சாகத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

வர்தத்கம் சுறுசுறுப்பு

இதனால இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் புள்ளிகள்ஏற்றத்துடன் காணப்பட்டன. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்து, 54,348 புள்ளிகளில் வர்த்தகம் நடந்துவருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 17,500 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் நடந்து வருகிறது.

லாபத்துடன் நகரும் பங்குகள்

மும்பைப் பங்குச்சந்தையில் பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்டிலே, லார்சன் அன்ட் டூப்ரோ, ஹெச்டிஎப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய பங்குகள் விலை லாபத்துடன் நகர்கின்றன. டாடா கன்சூமயர், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ ஆகியவை பங்குகள் தேசியப்பங்குச்சந்தையி் லாபத்துடன் நகர்கின்றன

சரிவு முகம்

டாடா ஸ்டீல், டெக்மகிந்திரா, சன்ஃபார்மா, என்டிபிசி,ஓஎன்ஜிசி, ஹின்டால்கோ, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன. நிப்டியில் ரியல்எஸ்டேட், ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கிகள், ஊடகம் ஆகிய துறைகள் லாபத்துடன் நகர்கின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம் ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன.