Asianet News TamilAsianet News Tamil

ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க ரூ.150... வங்கிக் கணக்கில் நவம்பர் 1-ம்தேதி முதல் புதிய விதி..!

வரும் நவம்பர் 1 முதல் மக்களுக்கு அவசியமான பல முக்கிய விதிகள் அமலுக்கு வர இருகின்றன. அந்த வகையில் இந்த கொரோனா காலத்தில், எல்பிஜி சிலிண்டர்கள் முதல் வங்கி சேவைகள் வரையிலான விதிகள் மாறி வருகின்றன. 
 

Rs 150 each time to withdraw money ... New rule from November 1 in a bank account
Author
Tamil Nadu, First Published Oct 30, 2020, 10:18 AM IST

வரும் நவம்பர் 1 முதல் மக்களுக்கு அவசியமான பல முக்கிய விதிகள் அமலுக்கு வர இருகின்றன. அந்த வகையில் இந்த கொரோனா காலத்தில், எல்பிஜி சிலிண்டர்கள் முதல் வங்கி சேவைகள் வரையிலான விதிகள் மாறி வருகின்றன. 

எல்பிஜி சிலிண்டர் விலைகள் வரும் 1-ம் தேதி முதல் மாறக்கூடும். விலைகளின் குறைவு அல்லது அதிகரிப்பு மாற்றம் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்க இருக்கின்றன. முன்னதாக, கடந்த அக்டோபர் 1 முதல் வணிக சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டது.Rs 150 each time to withdraw money ... New rule from November 1 in a bank account

சில வங்கிகள் நவம்பர் 1 ம் தேதி முதல் தங்கள் சேவைகள் தொடர்பான பல விதிகளை மாற்றி வருகின்றன. பாங்க ஆஃப் பரோடா வங்கி, நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டிய வங்கி சேவைகளுக்கு தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வேறுபட்ட கட்டணத்தை வசூலிக்கும். நடப்புக் கணக்கு, பணக் கடன் வரம்பு மற்றும் ஓவர்டிராப்ட் கணக்கிலிருந்து பணத்தை டெபாசிட் மற்றும் பணத்தை எடுப்பதற்காகன வரம்பை வங்கி நிர்ணயித்துள்ளது.

இதற்குப் பிறகு, இந்த வங்கி சேவைகள் இலவசமாக இருக்காது. பாங்க் ஆப் பரோடாவுக்குப் பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா மற்றும் செண்டரல் பேங்க் ஆகியவையும் அத்தகைய கட்டணத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.Rs 150 each time to withdraw money ... New rule from November 1 in a bank account

பாங்க் ஆப் பரோடாவில் கடன் கணக்கு – ஒரு மாதத்திற்கு 3 முறை இலவசம், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க ரூ .150 கட்டணம். சேமிப்பு கணக்கு – ஒரு மாதத்திற்கு 3 முறை இலவசம், அதன் பிறகு பணத்தை டெபாசிட் செய்ய ரூ .40 கட்டணம். பணத்தை எடுப்பதும் ஒரு மாதத்தில் 3 முறை இலவசம், அதன் பிறகு, ஒவ்வொரு முறையும் நீங்கள் பணத்தை எடுக்கும்போது 100 ரூபாய் கட்டணம். நடப்பு மற்றும் ஓவர்டிராப்ட் கணக்கு- ஒரு மாதத்திற்கு 3 முறை இலவசம், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க ரூ .150 கட்டணம். ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய 1 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Rs 150 each time to withdraw money ... New rule from November 1 in a bank account

இந்திய ரயில்வே நவம்பர் 1 முதல் முழு நாட்டிற்கும் ஒரு புதிய நேர அட்டவணையை வெளியிடப் போகிறது. இதில், பல ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரத்தை மாற்றலாம். முன்னதாக ரயில்களின் புதிய அட்டவணை அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே, நவம்பர் 1-க்குப் பிறகு ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் புதிய நேர அட்டவணையை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.Rs 150 each time to withdraw money ... New rule from November 1 in a bank account

சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான வழி வரும் மாதத்தில் மாறப்போகிறது. உண்மையில், சிலிண்டர்களின் போலி விற்பனையை நிறுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், எண்ணெய் நிறுவனங்கள் புதிய எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விநியோக முறையைத் தொடங்குகின்றன. இந்த புதிய அமைப்பில், வாடிக்கையாளரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு விநியோக அங்கீகாரக் குறியீடு அனுப்பப்படும், இது சிலிண்டரை வழங்கும் நேரத்தில் காண்பிக்கப்பட வேண்டும். உங்கள் எண் புதுப்பிக்கப்படாவிட்டால், டெலிவரி செய்யும் நபரிடம் உள்ள செயலியில் இருந்து மொபைல் எண்ணை உடனடியாக புதுப்பிக்க முடியும். ஆரம்பத்தில் இந்த முறை 100 ஸ்மார்ட் நகரங்களில் பொருந்தும் என்றாலும், வணிக சிலிண்டர்கள் முன்பைப் போலவே முன்பதிவு செய்யப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios