- Home
- Business
- சென்னைக்கு டப் கொடுக்கும் திருச்சி பஞ்சப்பூர்.. ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை.. லேட்டஸ்ட் நிலவரம்!
சென்னைக்கு டப் கொடுக்கும் திருச்சி பஞ்சப்பூர்.. ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை.. லேட்டஸ்ட் நிலவரம்!
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தால் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் முன்பு போல் இல்லை என சொல்லப்படுகிறது. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பயண நேரம் குறைந்துள்ளது என சில நன்மைகள் உள்ளன.

தமிழகத்தின் இதயப் பகுதி திருச்சி
தமிழகத்தின் இதயப் பகுதியில் இருக்கும் முக்கியமான நகரங்களில் ஒன்று திருச்சி. தமிழகத்தின் எந்த ஒரு மாவட்டத்திற்கும் எளிதாகச் செல்லக்கூடிய வகையில் நடுப்பகுதியில் திருச்சி அமைந்துள்ளது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மலைக்கோட்டை நகரான திருச்சி அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ரயில் நிலையம் அருகே அமைந்திருந்த சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பெரும் இடப்பற்றக்குறை ஏற்பட்டது. அங்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் வந்ததால் அவற்றை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம்
இதனை கருத்தில் கொண்டு திருச்சியின் நகரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள பஞ்சப்பூரில் மறைந்த கலைஞர் கருணாநிதி பெயரில் மிக பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இது தமிழகத்தின் முதல் ஏசி வசதி கொண்ட பேருந்து நிலையம் என்ற பெருமையை பெற்றது. இந்த பேருந்து நிலையத்தால் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் முன்பு போல் இல்லை. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் பயண நேரம் குறைந்துள்ளது என சில நன்மைகள் உள்ளன.
ராக்கெட் வேகத்தில் வீட்டு மனைகளின் விலை
அதே வேளையில் பேருந்து நிலையம் வந்ததில் இருந்து திருச்சி பஞ்சப்பூர் சென்னை ரேஞ்சுக்கு மாறி விட்டது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விட்டது. 2021-க்கு முன்பு பஞ்சப்பூரில் விவசாய தரிசு நிலம் ஏக்கருக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருந்தது. ஆனால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வந்த பிறகு ஏக்கருக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை நிலத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதாக ரியல் எஸ்டேட் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ரியல் எஸ்டேட் தரவுகள் சொல்வது என்ன?
மேலும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 1 கி.மீ சுற்றளவில் வீட்டு மனைகள் சதுர அடிக்கு ரூ.2,500 முதல் ரூ.4,500 வரை விற்கப்படுவதாகவும் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சில பிரீமியம் இடங்களில் சதுர அடி ₹6,000 முதல் ₹10,000 வரை கூட விற்பனையாவதாக ரியல் எஸ்டேட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனி வீடுகள் எவ்வளவு?
இது தவிர 2 BHK தனி வீடு (சுமார் 1200 ச.அடி) இடத்தின் அமைவிடத்தைப் பொறுத்து ₹45 லட்சம் முதல் ₹65 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பழைய வீடுகள் சுமார் ₹35 லட்சம் - ₹45 லட்சம் என்ற அளவில் உள்ளன. பேருந்து நிலையம் மற்றும் டைடல் பார்க் பணிகளால், இங்கு வாடகை வீடுகளுக்கான தேவையும் 20-30% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

