மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான UPI கட்டண வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. சிறு பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ (UPI) மூலம் பண வர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான யுபிஐ கட்டண வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பணவியல் கொள்கைக் குழுவின் முடிவை அறிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பல்வேறு வகை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். இப்போது மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான UPI பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதன்படி தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு 1 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.. இது நுகர்வோர் கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யுபிஐ பரிவர்த்தனி மேற்கொள்ளுவோரு அதிகளவில் பணம் செலுத்த உதவும்." என்றும் கூறினார்.

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

யெஸ் செக்யூரிட்டி ஆராய்ச்சி மற்றும் முன்னணி ஆய்வாளர் சிவாஜி தப்லியால் இதுகுறித்து பேசிய போது, “ சில்லறை டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான ஒரு தளமாக UPI பரிவரித்தனை இருக்கிறது. இதனை மேலும் மேம்படுத்த ரிசர்வ வங்கி தொடர்ந்து கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெரிய மதிப்பு சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பொதுவாக கடன் களத்தில் உள்ளன. எனவே, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக UPI கொடுப்பனவுகள் எந்த அளவிற்கு கிரெடிட் கார்டுகளிலிருந்து பரிவர்த்தனை மதிப்பை மாற்றும் என்பதைப் பார்க்க வேண்டும். பெரிய மதிப்புள்ள சில்லறை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சில முக்கிய பிரிவுகள் பயண முன்பதிவுகள், ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட்டுகள் மற்றும் இ-காமர்ஸ் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையில் பெரிய சில்லறை பரிவர்த்தனைகள் உட்பட பல துறைகளில் நடைபெறுகின்றன” என்று தெரிவித்தார்.

அதே போல் குறிப்பிட்ட வகைகளுக்கான தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான மின்-ஆணைகளுக்கான வரம்பை RBI உயர்த்தியுள்ளது.

இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை..? வங்கி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய குட்நியூஸ்..

சக்திகாந்த தாஸ் இதுகுறித்து பேசிய போது "மீண்டும் திரும்பத் திரும்பப் பணம் செலுத்துவதற்கான மின்-ஆணைகள் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகிவிட்டன. இந்த கட்டமைப்பின் கீழ், ₹15,000க்கு மேல் திரும்பத் திரும்பப் பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரத்தின் கூடுதல் காரணி (AFA) தேவைப்படுகிறது. இப்போது இந்த வரம்பை ₹1 லட்சமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் சந்தாக்கள், காப்பீட்டு பிரீமியம் சந்தாக்கள் மற்றும் கிரெடிட் கார்டு திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான கொடுப்பனவுகளுக்கான ஒரு பரிவர்த்தனைக்கு இந்த நடவடிக்கை மின்-ஆணைகளின் பயன்பாட்டை மேலும் துரிதப்படுத்தும்" என்று தெரிவித்தார்.