Asianet News TamilAsianet News Tamil

மாதம் ரூ.2,000 வரை நிதியுதவி.. விதவை பெண்களுக்கான அரசின் அசத்தல் திட்டம்.. எப்படி விண்ணப்பிப்பது?

விதவை பெண்களுக்கு உதவும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் வித்வா ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

Financial assistance up to Rs.2,000 per month.. Govt's amazing scheme for widows.. How to apply?
Author
First Published Jun 2, 2023, 2:24 PM IST

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விதவை பெண்களுக்கு உதவும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் வித்வா ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், தங்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் வித்வா பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய, நிதியுதவி இல்லாத விதவைப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன. வித்வா பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் விதவைகளுக்கு மாநில அரசு வழங்கும் நிதியுதவி மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

இதையும் படிங்க : மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காது.! கர்நாடக அரசுக்கு எதிராக சீறும் வைகோ

இத்திட்டம் ஏழை விதவைகளுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவி செய்கிறது. இந்த யோஜனா திட்டத்தின் கீழ், விதவை பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும், விதவையின் மரணத்திற்குப் பிறகு இந்த யோஜனாவின் கீழ் வழங்கப்படும் நிதிப் பலனைப் பெற, விதவைப் பெண்களின் குழந்தைகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்கள் தகுதி பெற மாட்டார்கள்.

வித்வா பென்ஷன் யோஜனாவின் நோக்கம்

வித்வா பென்ஷன் யோஜனாவின் முக்கிய நோக்கம் கணவரின் மரணத்திற்குப் பிறகு மற்ற குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்திருக்கும் விதவை பெண்களுக்கு ஆதரவளிப்பதாகும். கணவரின் மரணத்திற்குப் பிறகு பெண்கள் பல பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. நாட்டில் விதவை பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மனதில் வைத்து அரசாங்கம் வித்வா பென்ஷன் யோஜனாவை அறிமுகப்படுத்தியது.

இந்த யோஜனா மூலம், விதவை பெண்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது. விதவை பெண்கள் இந்த யோஜனாவின் கீழ் நிதியுதவி பெறுவதால், தங்கள் தேவைகளை நிறைவேற்ற மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை. இந்த யோஜனா விதவை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களை தன்னம்பிக்கையுள்ளவர்களாக மாற்றுவதையும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வித்வா ஓய்வூதியத் திட்டத்திற்கான தகுதி 

  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விதவை பெண்கள் மட்டுமே இந்த யோஜனாவின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்.
  • விதவை பெண்ணின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • கணவன் இறந்த பிறகு விதவைப் பெண் மறுமணம் செய்து கொண்டால், அவர் இந்த யோஜனாவின் கீழ் பலன்களை பெற முடியாது.
  • பெண்ணின் குழந்தைகள் பெரியவர்களாக இருந்தால், அவரை பராமரிக்க முடிந்தால், இந்த யோஜனாவின் கீழ் பலன்களை அப்பெண்ணால் பெற முடியாது.

வித்வா பென்ஷன் யோஜனாவின் பலன்கள்

பொதுவாக, விதவைப் பெண்ணுக்கு அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.300 கிடைக்கும். இருப்பினும், இந்தத் தொகை அந்தந்த மாநிலத்தைப் பொறுத்து மாதத்திற்கு ரூ.300 முதல் ரூ.2,000 வரை மாறுபடும். 80 வயதை அடைந்த பிறகு, பயனாளிக்கு முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.500 வழங்கப்படும். ஓய்வூதியத் தொகையை மாநில அரசு நேரடியாக பயனாளியின் விதவை வங்கிக் கணக்கில் செலுத்தும். தமிழகத்தை பொறுத்த வரை இந்த திட்டத்தின் கீழ் விதவை பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

வித்வா பென்ஷன் யோஜனா விண்ணப்ப செயல்முறை

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பொதுவாக, ஒரு விதவைப் பெண் வித்வா ஓய்வூதியத் திட்டத்திற்கு முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்று இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். ஒரு விதவை பெண் தனது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்/இ-சேவை இணையதளத்தில் விதவை ஓய்வூதிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

  • விண்ணப்பதாரர் புகைப்படம்
  • அடையாளச் சான்று (வாக்காளர் அட்டை/ ரேஷன் கார்டு/ ஆதார் அட்டை)
  • பிறப்பு சான்றிதழ்
  • வங்கி பாஸ்புக்
  • கணவரின் இறப்பு சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்

இதையும் படிங்க : ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்றும்.! வேதாந்தா நிறுவனத்தின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு

Follow Us:
Download App:
  • android
  • ios