DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் அகவிலைப்படி(டிஏ) உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் அகவிலைப்படி(டிஏ) உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு 3 சவீதம் வரை இருக்கும். இதன் மூலம் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்பட மத்திய அரசு ஊழியர்கள் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயன் பெறுவார்கள்.

2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது 31 சதவீதம் அகவிலைப்படி பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்த்தப்படும்போது, 34 சதவீதமாக அதிகரிக்கும்.

7-வது ஊதியக்குழு வந்தபின், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்தவகையில் ஜனவரி மாதத்துக்கான படி மார்ச்சில் உயரும், அடுத்ததாக ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

மத்திய அரசுவட்டாரங்கள் தகவலின்படி அகவிலைப்படி 3 சதவீதம் உயரும்பட்சத்தில் அதிகபட்சமாக ரூ.90ஆயிரம்வரை ஊதியம் கூடுதலாகப் பெறுவார்கள். இதுகுறித்து ஜேசிஎம் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில் “ பணவீக்கத்தின் அடிப்படையில் டிஏ உயர்த்தப்பட வேண்டும். கடந்த18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் தொகையையும் வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்

உதாரணமாக மத்திய அரசு ஊழியர் ஒருவர் ரூ.30ஆயிரம்ஊதியம் பெற்றால், 3 சதவீதம்டிஏ உயர்த்தப்படும்போது, அவருக்கு மாதம் ரூ.900 உயரும். ஆண்டுக்கு ரூ.10,800 உயரும். கேபினெட் செயலாளர்கள் அந்தஸ்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.7500 உயரும்,மாதம் ரூ.2.50 லட்சம் ஊதியம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.90ஆயிரம் கூடுதலாக கிடைக்கும்