Ferrari Purosangue Launch : உலக அளவில் புகழ் பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி, தனது முதல் SUV காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஃபெராரியின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான தயாரிப்புகளில் ஒன்றான "ஃபெராரி புரோசாங்கு" இறுதியாக இந்திய சந்தையை வந்தடைந்துள்ளது. உலக அளவில் கடந்த 2022ம் ஆண்டு அறிமுகமான இந்த சூப்பர் கார், பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரால் இப்பொது வாங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 4 கதவுகளுடன் அறிமுகமாகும் முதல் ஃபெராரி இதுவாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பகிரப்பட்ட விவரங்களின்படி, அந்த உரிமையாளர்கள் கண்ணைக் கவரும் நீரோ டேடோனா கருப்பு நிற காரை தேர்ந்தெடுத்துள்ளனர். இது சாலையில் செல்பவர்களை நிச்சயம் திரும்பிப்பார்க்கவைக்கும். இது நான்கு கதவுகளுடன் கூடிய முதல் வாகனம் ஆகும், மேலும் நான்கு இருக்கை அமைப்புடன் இது வருகிறது.

ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார் வரப்போகுது! ஹூண்டாய், மாருதி தாக்குப் பிடிக்குமா?

ஃபெராரி புரோசாங்கு 6.5 லிட்டர் V12 எஞ்சின் மூலம் அதன் ஆற்றலை வழங்குகிறது, இது 715 bhp மற்றும் 716 Nm உச்ச முறுக்குவிசையின் வலுவான வெளியீட்டை உருவாக்குகிறது. யூனிட் 2-ஸ்பீடு பவர் டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 8-ஸ்பீடு டிசிடி ரியர்-செட் டூயல் கிளட்ச் செட்டப்புடன் வழங்கப்படுகிறது. நான்கு சக்கரங்களிலும் சக்தியை அடைய இது அந்த சூப்பர் காருக்கு உதவுகிறது.

View post on Instagram

இந்த கார் வெறும் 3.3 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடியது, அதே நேரத்தில் 0 முதல் 200 கிமீ வேகத்தை வெறும் 10.6 வினாடிகளில் எட்ட முடியும் என்று ஃபெராரி கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனம் மணிக்கு 310 கிமீ வேகத்தில் செல்லும், இந்த ஆடம்பர அம்சங்களை போல இதன் விலையும் அதிகம் தான், இந்திய சந்தையில் சுமார் 10.5 கோடி என்ற ஆரம்ப விலையில் இது விற்பனையாகிறது.

மிரட்டலான லுக்... பக்காவான அப்டேட்ஸ்... புதிய பஜாஜ் பல்சர் NS 160, NS200 பைக் அறிமுகம்!