ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த கிழமையை வைத்து அவரது குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தை கணித்துவிடலாம்.

ஜோதிடம் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. இதன் மூலம் ஒருவரது ஆளுமை மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த ராசி தான் அவரது ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஆகவே ஒவ்வொரு ராசியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், வெறும் ராசி மட்டுமல்ல ஒருவர் பிறந்த கிழமையை வைத்தும் கூட அவரை பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ள முடியும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? எனவே, ஒருவர் பிறந்த கிழமையை வைத்து அவர் எப்படிப்பட்டவர் மற்றும் அவரது எதிர்காலம் எப்படியிருக்கும் என்று இந்த பதவில் காணலாம்.

ஒருவர் பிறந்த கிழமையும் ஜோதிடமும்..

1. ஞாயிற்றுக்கிழமை

ஜோதிடத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களின் அதிபதி சூரியன் இவர்களிடம் இயற்கையாகவே தலைமைத்துவப் பண்புகள், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை இருக்கும். இவர்களிடம் நேர்மறை ஆற்றல் மற்றும் துடிப்பான இருப்பு குணம் இருப்பதால் இவர்களை சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கும் தலைவராக இருப்பார்கள். இதனாலே இவர்கள் எதிர்காலத்தில் சிறந்த அதிகாரமிக்க தலைமை பொறுப்புகளில் இருப்பர்.

2. திங்கள்கிழமை

ஜோதிடத்தின் படி, திங்கள் கிழமை பிறந்தவர்கள் உடையவர்களாக இருப்பார்கள். சந்திரனால் ஆளப்படும் இவர்கள் புணர்ச்சிரீதியாக இணக்கமாக இருப்பர். இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களிடம் இருக்கும் பட்சபாத குணத்தால் இவர்கள் எப்போதுமே பிறரது தேவைகளை பூர்த்தி செய்பவராகவும், ஆதரிப்பவராகவும் இருப்பார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர், ஆசிரியர் போன்ற மற்றவர்களை வழி நடத்தும் வேளையில் தான் இருப்பார்கள்.

3. செவ்வாய்க்கிழமை

ஜோதிடத்தின் படி, செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களை செவ்வாய் கிரகம் ஆளுவதால் இவர்கள் இயற்கையாகவே துணிச்சல் கொண்டவராகவும், சுறுசுறுப்பு மற்றும் மன உறுதி உடையவராகவும் இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் நேரடியாக எதிர்கொள்வார்கள். இந்த குணத்தால் இவர்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளையும் சந்திக்க பயப்படமாட்டார்கள். எதிர்காலத்தில் இவர்கள் ராணுவம் காவல்துறை போன்ற துறைகளில் பணி செய்வார்கள்.

4. புதன்கிழமை

ஜோதிடத்தின் படி, புதன்கிழமையில் பிறந்தவர்களை ஆளும் கிரகம் புதன் என்பதால், இவர்கள் கூர்மையான அறிவு திறன் கொண்டவராக இருப்பார்கள். மேலும் சிறப்பாக தொடர்பு கொள்ளும் திறனும் இவர்களிடம் உண்டு. இவர்கள் எல்லா விஷயத்திலும் தீவிர ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள் ஆனால் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள் விரைவாக சிந்திக்கும் திறனும் இவர்களிடம் உண்டு. இந்த கிழமையில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் வணிகத்துறை, வணிகம், கற்றல் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்.

5. வியாழன் கிழமை

ஜோதிடத்தின் படி வியாழன் கிழமை பிறந்தவர்களை குரு பகவான் ஆளுகிறார். இதனால் இவர்கள் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களிடம் நம்பிக்கை, தாராள மனப்பான்மை மற்றும் தொலைநோக்கு சிந்தனை இருக்கும். இவர்களிடம் இருக்கும் நகைச்சுவையான குணமும், நேர்மறையான கண்ணோட்டமும் பிறருக்கு உற்சாகத்தை கொடுக்கும். இதனாலே பலரும் இந்த தேதியில் பிறந்தவர்களை நண்பராக்க வேண்டுமென்று ஆசைப்படுவர். இந்த தேதியில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் கலைத்துறை, படைப்பாற்றல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவர்.

6. வெள்ளிக்கிழமை

ஜோதிடத்தின் படி, வெள்ளிக்கிழமை பிறந்தவர்களை காதல் மற்றும் வசிகரத்தை கொண்ட கிரகமான சுக்கிரன் ஆளும். இந்த கிழமையில் பிறந்தவர்கள் பொதுவாக வசீகரம் மற்றும் படைப்பாற்றல் கொண்டவராகவும், அழகு மற்றும் நல்லிணக்கம் உடையவராகவும் இருப்பார்கள். இயற்கையாகவே இவர்கள் காதல் உணர்வு கொண்டவராக இருப்பர். எதிர்காலத்தில் இவர்கள் அரசியல் மற்றும் கலை துறையில் சாதிப்பர்.

6. சனிக்கிழமை

ஜோதிடத்தின்படி சனிக்கிழமை பிறந்தவர்களின் கிரகம் சனி பகவான். இவர்கள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வுக்கு கொண்டிருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால் அதை திறனுடன், அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பர். எதிர்காலத்தில் இவர்கள் சொந்த தொழில் அல்லது வியாபாரம் போன்றவற்றை செய்து அதில் பிரகாசிப்பார்கள்.