Dhanusu Rasi This Week Rasi Palan: டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த வார ராசிப்பலன்கள் - தனுசு

தனுசு ராசி நேயர்களே, குருவின் பார்வை உங்கள் ராசியில் விழுவதால் கடந்த காலத்தில் இருந்த தடைகள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிறக்க இருக்கும் புத்தாண்டு புதிய வாய்ப்புகளுடன் பிறக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமானாலும் வெற்றிகரமாக முடியும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிதி நிலைமை:

பண வரவு திருப்திகரமாக இருக்கும். குறிப்பாக பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். குருவின் பார்வையால் கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது அவசியம். வீடு அல்லது வாகனம் வாங்குவது தொடர்பான முதலீடுகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் சிறிய வருமானம் வர வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. இருப்பினும் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறுகள் வர வாய்ப்பு உண்டு. வயதானவர்களுக்கு கால் வலி, மூட்டுவலி தொடர்பான உபாதைகள் வந்து நீங்கும். பயணங்களின் போது துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. மன அழுத்தத்தை குறைக்க தியானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும். குருவின் பார்வையால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். இவர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் உங்கள் இலக்கை அடைவீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். கடினமான பாடங்களையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். உயர்கல்விக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அழைப்புகள் வரலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு தேங்கி கிடந்த சரக்குகள் விற்பனையாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அர்த்தாஷ்டம சனி நடப்பதால் சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது அவசியம்.

குடும்ப உறவுகள்:

கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண முயற்சிகளில் இருந்து தடைகள் நீங்கி சுப காரியங்கள் கைகூடும். குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகோதர வழியில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும்.

பரிகாரம்:

சனி பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தை குறைக்க உதவும். ஏழை எளியவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை மாலை அணிவிக்கவும். ‘ஓம் நமோ நாராயண’ மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)