Oct 13, 2018, 10:59 AM IST
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்ததன் வாயிலாக ஏற்கெனவே போதுமான அளவிற்கு பாப்புலர் ஆகிவிட்ட யாஷிகா ஆனந்த், பிக் பாஸில் போட்டியாளராகக் கலந்துகொண்டதன் வாயிலாக இன்னும் கூடுதலாகக் கவனத்தைப் பெற்றார். அதேபோல 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா, பிக் பாஸில் கலந்துகொண்டதன் பின்னர் திடீர் பாப்புலர் ஆனார். ஆனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இயல்புக்குத் திரும்பியுள்ள யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தற்போது வீடியோவொன்றைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் இந்தப் பாடலை சொந்தமாக கம்போஸ் செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், ஐஸ்வர்யாவுடன் நடனமாடிக் கொண்டே, "நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு" என ஐஸ்வர்யாவுடன் இணைந்து பாடியும் உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.