பெட்ரோல் பங்க் சூறையாடல்! அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி...

Oct 2, 2018, 11:40 AM IST

ஒவ்வொரு நாளும் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 2 மாதங்களாக பெட்ரோல் விலை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 89 ரூபாய்ககு விற்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டத்தல் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களும் இதனால் தங்கள் வாகங்களை ஓரங்கட்டி வைத்துள்ளனர்.அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையான உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் பூரியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு விற்கபட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் அந்த பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் போலீசாரும் எவ்வளவோ முயற்சி செய்தும் பொது மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில முதல்முறையாக பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பொது மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.