இளம்பெண்ணை கற்பழித்து கொடூரமாக தாக்கும் போலீஸ் அதிகாரி மகன்..! வெளியானது அதிர்ச்சி வீடியோ!

Sep 14, 2018, 6:03 PM IST

டெல்லியில் போலீஸ் உயர் அதிகாரியின் மகன் இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து, அடித்து சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ கடந்த 3-ந்தேதி எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் உயர்அதிகாரி மகனின் நண்பர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சிகள் காண்போர் மனதை பதறவைக்கும் விதமாக இருக்கிறது.

டெல்லியில் போதைமருந்து தடுப்புப் பரிவில் எஸ்.ஐஆக பணிபுரிந்து வருபவர் அசோக் சிங் தோமர். இவரின் மகன் ரோகித் தோமர். 21வயதாகும் தோமருக்கு வேலைகிடைக்காமல் ஊரைச் சுற்றிவந்த நிலையில், சமீபத்தில் ஒரு பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்தது, ஆனால், வேலைக்குச் செல்லவில்லை.

இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், ரோகித் தோமரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதி்க்கப்பட்ட அந்த பெண்ணையும் கண்டுபிடித்து மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பியதில், அதில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ரோகித் தோமர் மீது ஐபிசி 354, 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளளனர். இந்த வீடியோவைப் பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி போலீஸ் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் சார்பில் ட்விட்டரில் கூறுகையில், ஒரு இளைஞர், ஒரு இளம் பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி எங்கள் பார்வைக்கு வந்தது. டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக்கிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் டெல்லி உத்தம்நகர் இம்மாதம் 3-ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. உத்தம்நகரில் உள்ள பிபிஓ அலுவலகத்துக்கு அந்த இளம் பெண்ணை வரக்கூறிய அந்த இளைஞர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து புகார் கொடுப்பேன் என்று கூறிய அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், துணிச்சலாக அந்த பெண் ரோகித் தோமர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில், அந்த இளம்பெண்ணை தரையில் கிடத்தி தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து அந்த இளைஞர் தாக்குகிறார். தன்னுடைய முழங்காலால் அந்த இளம்பெண் முதுகில் உதைத்து அந்த பெண்ணை சித்ரவதை செய்கிறார். வலிதாங்க முடியாமல் அந்த பெண் அலறும் சத்தம் வீடியோவில் கேட்கிறது. மேலும், ரோகித் நிறுத்து, நிறுத்து என்று வீடியோவில் யாரே சிலர் சொல்வது கேட்டபோதிலும், யாரும் அந்த சம்பவத்தை தடுக்கவில்லை.