தமிழகத்தில் 31வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார்

Jul 1, 2023, 4:27 PM IST

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் தமிழ்நாடுஅரசு நியமனம் செய்தது. இந்நிலையில் இன்று கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பூங்கொத்து கொடுத்து டிஜிபி சங்கர் ஜிவால்க்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சைலேந்திர பாபுக்கு மரியாதை செலுத்தும் விதமாக  காவல் துறை உயரதிகாரிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் வடம்பிடித்து சைலேந்திர பாபுவை வழி அனுப்பி வைத்தனர்.