திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..

திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..

Published : Oct 07, 2022, 02:27 PM IST

திருப்பூரில் தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படும் என்றும் அமைச்சர் கீதான் ஜீவன் தெரிவித்துள்ளார். 

திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நேற்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டு 14 மாணவர்கள், திருப்பூர் மற்றும் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் மூன்று சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்த திருப்பூர் ஆட்சியர், இறந்த மாணவர்களின் உடல் கூராய்விற்கு பின்னர் மரணம் குறித்து காரணம் தெரியவரும் என்று பேட்டியளித்தார்.

மேலும் படிக்க:பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை..

மேலும் திருப்பூர் தனியார் காப்பக மாணவர்கள் இறப்பு குறித்து முழுமையான விவாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட தனியார் காப்பகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் இங்கு பாதுகாப்பு காப்பாளர் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். கெட்டுப்போண உணவை தந்தால், 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:திருப்பூரில் தனியார் ஆதரவற்ற காப்பகத்தில் உணவு அருந்திய சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. 3 பேர் பலி..

காப்பக நிர்வாக செயல்பாடுகள் அலட்சியமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி நிர்வாகத்தில் அலட்சியத்தாலும் மெத்தனபோக்கினாலும் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படும். அத்துடன் மூன்று சிறுவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீதும் காப்பக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் இங்குள்ள சிறார்கள் அனைவரும் உடல் நலம் சரியானவுடன் , அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவர் என்று கூறினார்.
 

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி