திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..

திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..

Published : Oct 07, 2022, 02:27 PM IST

திருப்பூரில் தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படும் என்றும் அமைச்சர் கீதான் ஜீவன் தெரிவித்துள்ளார். 

திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நேற்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டு 14 மாணவர்கள், திருப்பூர் மற்றும் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் மூன்று சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்த திருப்பூர் ஆட்சியர், இறந்த மாணவர்களின் உடல் கூராய்விற்கு பின்னர் மரணம் குறித்து காரணம் தெரியவரும் என்று பேட்டியளித்தார்.

மேலும் படிக்க:பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை..

மேலும் திருப்பூர் தனியார் காப்பக மாணவர்கள் இறப்பு குறித்து முழுமையான விவாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட தனியார் காப்பகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் இங்கு பாதுகாப்பு காப்பாளர் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். கெட்டுப்போண உணவை தந்தால், 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:திருப்பூரில் தனியார் ஆதரவற்ற காப்பகத்தில் உணவு அருந்திய சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. 3 பேர் பலி..

காப்பக நிர்வாக செயல்பாடுகள் அலட்சியமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி நிர்வாகத்தில் அலட்சியத்தாலும் மெத்தனபோக்கினாலும் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படும். அத்துடன் மூன்று சிறுவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீதும் காப்பக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் இங்குள்ள சிறார்கள் அனைவரும் உடல் நலம் சரியானவுடன் , அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவர் என்று கூறினார்.
 

05:57திருமாவுக்கு ஆதவ் அர்ஜுனா சவால்.. என்னை திட்டினாலும் பரவாயில்ல, நான் அரசியலை விட்டே போய்விடுகிறேன்
05:42எச்சரிக்கையா விசில் அடிங்க... தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ - புகழ்ந்து தள்ளிய செங்கோட்டையன்
06:16விஜய் மற்றும் அவரது தந்தை ஜெயலலிதா அவர்களிடம் கை கட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்
06:04அடங்கிப் போகும் ஆளா நானு..? அடிமையா இருக்க அரசியலுக்கு வரல... விஜய் பரபரப்பு பேச்சு
05:17நடிகர் வடிவேலு ஆமை புகுந்த கட்சியில் உள்ளார் ! கடுமையாக தாக்கி பேசிய நடிகர் கஞ்சா கருப்பு
07:19அதிமுக, பாஜக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது ! திருமாவளவன் பேட்டி
02:26சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணிக்கு 210 இடங்கள் கன்ஃபார்ம்.. ஆளும் திமுகவை அலறவிடும் இபிஎஸ்
03:29மழைநீர் வடிகாலில் கொசுவலை போடப்பட்டது சர்ச்சையான நிலையில் மேயர் பிரியா விளக்கம்
03:28விஜய் அ.தி.மு.க தலைமையிலான NDA கூட்டணியில் இணைந்து பவன் கல்யாண் மாதிரி வரணும் - நடிகை கஸ்தூரி
03:18அண்ணா பேருந்து நிலையம் முன்பு த.வெ.கவினர் "விசில்" சின்னத்தை பொது மக்களுக்கு வழங்கி கொண்டாட்டம் !