நான் ஓட்டு போட போறேன் நீயும் வரியா; தாயை ஜனநாயக கடமையாற்ற அழைக்கும் 2 வயது மழலையின் வீடியோ வைரல்

Apr 20, 2024, 7:52 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அரசியல் கட்சியினர்களுக்கும், வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்த பின்பும், வாக்குகள் எண்ணப்படும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை தொடர்கிறது. 

அந்த தேர்தல் ஜுரம் 2 வயது குழந்தையை கூட விட்டு வைக்கவில்லை. சிவகாசியை சேர்ந்த ஷிவானிஸ்ரீ என்ற  குழந்தை அப்பாவித்தனமான முகத்துடன் தன்னுடைய தாயை தனது மழலை மொழியில் நான் ஓட்டு போடப் போறேன்!- நீ வரியா? ஓட்டு போட போவோம்!! என அழைக்கிறது. இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.