அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்

அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்

Published : Mar 21, 2024, 10:30 PM IST

திருப்பத்தூரில் அலட்சியமாக சாலையை கடந்த இருசக்கர வாகன ஓட்டி மீது மோதமல் இருக்க காலை வேகமாக திருப்பிய நபர் சாலையோரம் மோதி விபத்தில் சிக்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 36). இவர் கட்டேரி பகுதியில் இருந்து பக்கிரிதக்கா பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் முன்பின் பார்க்காமல் தனது இருசக்கர வாகனத்தை நேராக திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையை கடந்தார்.

அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற லாரியின் பின்புறம்  இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதன் காரணமாக மனோகரன் தலையில் பலத்த காயமடைந்தது பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர்  மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மனோகர் ரோட்டை கடக்க முற்படும்போது அதன் எதிரே குடியாத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜ் (48) என்பவர் காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி உள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செந்தில்குமாரின் கால் உடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதன் சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்
Read more