144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்

Oct 12, 2024, 11:47 AM IST

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு 144 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் விமானத்தில் அதிக அளவில் எரிபொருள் இருந்ததால் விமானம் தீவிபத்துக்குள்ளாகும் ஆபத்து இருந்தது. இதனால் சாதுரியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை சுமார் 2 மணி நேரமாக திருச்சி, புதுக்கோட்டையில் வானில் வட்டமடித்தபடி இருந்தனர்.