தஞ்சையில் நீர்நிலை அருகே இறை தேடிய அரியவகை வெள்ளை மயில்

Nov 14, 2023, 9:35 PM IST

தஞ்சாவூரை அடுத்துள்ள  ஈச்சங்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்  கல்லூரிக்கு பின்புறம் உள்ள கல்லணைக் கால்வாய்  ஆற்றங்கரையில் வெள்ளை நிற மயில் ஒன்று  தென்பட்டுள்ளது. வெள்ளை  மயில்களை  காண்பது அரிது என்பதால், ஆற்றங்கரையில்  இருசக்கர வாகனத்தில் சென்றவர் தனது செல்போனில்  வெள்ளை மயில் ஒன்று  அழகாக நடந்து செல்வதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.