கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் மார்கழி பூக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கோலப்போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மார்கழி பூக்கள் என்னும் தலைப்பில் வண்ண கோலம் போட்டி நடைபெற்றது. பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். கோலமானது மனதிற்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. புள்ளிக்கோலம், ரங்கோலி கோலம் என பல வகைகள் உண்டு. 

நாம் மனதில் நினைப்பதையும் சொல்ல விரும்புவதையும் கோலங்கள் மூலம் வெளிப்படுத்தலாம். அப்படிப்பட்ட கோலங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இக்கோல போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டியில் சிறப்பாக வரையப்பட்ட முதல் 10 கோலங்களுக்கு பட்டுப் புடவை பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more