சுத்தம் சோறு மட்டுமல்ல பிரியாணியும் போடும்; தஞ்சையில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து அளித்த டிரஸ்ட்

சுத்தம் சோறு மட்டுமல்ல பிரியாணியும் போடும்; தஞ்சையில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து அளித்த டிரஸ்ட்

Published : Feb 27, 2024, 07:33 PM IST

தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நகரின் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணி நகரை அழகாக்கும் பணியில் உயிரை துச்சமென எண்ணி ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவது, கிருமி நாசினி தெளிப்பது என தொடர்ந்து தூய்மை பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் “சுத்தம் பிரியாணியும் போடும்” என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா தஞ்சை மாநகராட்சி 13ம் கோட்ட தூய்மை பணியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி 13ம் கோட்டத்தை சேர்ந்த ( வார்டு 50 / 51 பகுதியில் பணிபுரியும் ) தூய்மை பணியாளர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் உள்ளிட்ட 85 பணியாளர்களுக்கு மட்டன், சிக்கன், முட்டை, ஐஸ்க்ரீமுடன் கூடிய அசைவ மதிய விருந்து பரிமாறப்பட்டது.

இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் சுத்தம் பிரியாணியும் போடும் என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தன்னலம் பாராமல் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தஞ்சை நகர பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் முழு அசைவ விருந்து பரிமாறுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சை மாநகராட்சியில் தான் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் விலையில்லா முழு அசைவ விருந்து பரிமாறும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்தளிக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more