தஞ்சையில் ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுமிகள் புதை மணலில் சிக்கி பரதாமபாக பலி

தஞ்சையில் ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுமிகள் புதை மணலில் சிக்கி பரதாமபாக பலி

Published : Feb 20, 2023, 03:25 PM IST

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி குடமுருட்டி ஆற்றில் புதை மணலில் சிக்கி ஆடு மேய்க்க சென்ற இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தஞ்சை மாவட்டம் ஒன்பத்துவேலி காமராஜர் காலணியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவரின் மகள் பிரத்திகாவும் (வயது 14). சௌந்தராஜன் என்பவரின் மகள் குணசுந்தரியும் (வயது 16) நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக குடமுருட்டி ஆற்றுக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆடுகள் கரையோரம் மேய்து கொண்டு இருந்த நிலையில் சிறுமிகள் இரண்டு பேரும் குடமுருட்டி ஆற்றில் விளையாடி கொண்டு இருந்தனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கி மூழ்கி உள்ளனர். ஆடு மேய்க்க சென்ற சிறுமிகள் நீண்ட நோமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் குடமுருட்டி ஆற்றில் சென்று தேடியபோது சிறுமிகள் இரண்டுபேரும் புதை மணலில் சிக்கி உயிர் இழந்து இருப்பது தெரியவந்தது. சிறுமிகளின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்