ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பிரசாதன சாலையை ஆக்கிரமித்து அடாவடி செய்த விசிகவினர்; சேலத்தில் மக்கள் அவதி

ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பிரசாதன சாலையை ஆக்கிரமித்து அடாவடி செய்த விசிகவினர்; சேலத்தில் மக்கள் அவதி

Published : Jan 05, 2024, 02:27 PM IST

சேலத்தில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் அடாவடி செய்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர்.

தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக மாற்றக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்பொழுது சுமார் 20 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி அடாவடியாக வாகனங்களை இயக்கினர்.

தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலையில் வாகனங்களை நிறுத்திக் கொண்டு எந்த ஒரு வாகனத்திற்கும் வழி விடாமல் அதிக ஒலி எழுப்பி அடாவடி செய்தனர். வெகு நேரம் நகராமல் அங்கே  இருந்த விசிக நிர்வாகிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் இந்த செயல் அந்த வழியே சென்ற பொது மக்களுக்கு மிகவும் இடையூற ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more