மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கண்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கண்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்

Published : Jul 10, 2023, 11:05 AM IST

மேட்டூர் அருகே மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கண்டெய்னர் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமனின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோனூரைச் சேர்ந்த தம்பதியினர் செல்வகுமார் (வயது 45), ஸ்ரீதேவி (40). இவர்களது மூத்த மகள் அக்சிதாவுக்கு (13) மஞ்சள் நீராட்டு விழா அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மனைவியின் உடன் பிறந்த சகோதரர் அருன் பிரசாத் (35) தாய்மாமன் சீராக மேச்சேரியில் இருந்து சென்டை மேளங்கள் முழுங்க கண்டெய்னர் லாரியில் சீர்வரிசையாக 150 தட்டுகளில் கருப்பட்டி, பழங்கள், பூக்கள், பட்டுப் புடவைகள், பலகாரங்கள், பித்தளை பாத்திரங்கள், ஆடைகள், வாழைத்தார்கள் மற்றும் ஆடுகள் உள்ளிட்ட பொருட்கள் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டன.
 
மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி உறவினர்கள் அழைத்து வரப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மேச்சேரியில் இருந்து கோனூர் வரை 10 கி.மீ, தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சீர்வரிசை சாலையில் சென்ற அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more