சேலத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி; கூட்டம் அலைமோதியதால் தள்ளு முள்ளு

சேலத்தில் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி; கூட்டம் அலைமோதியதால் தள்ளு முள்ளு

Published : Dec 09, 2023, 08:07 PM IST

சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட கடையின் விளம்பரத்திற்காகவும், 10 ரூபாய் நாணயம் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 ரூபாய் நாணயத்திற்கு வழங்கப்பட்ட பிரியாணியை வாங்கள் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் காசக்காரனுர் பகுதியில் இன்று புதியதாக பிரியாணி கடை ஒன்று துவக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பத்து ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடை திறக்கப்பட்டதும் பத்து ரூபாய் நாணயத்துடன் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். 

தொடர்ந்து பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்து சிக்கன் பிரியாணி வாங்கி சென்றனர். ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போட்டி போட்டுக் கொண்டு பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்து சிக்கன் பிரியாணி வாங்கி சென்றனர்.

பெரும்பாலான கடைகளில் மற்றும் வணிக நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பதால் அனைவரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக உரிமையாளர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more