Watch : முதன் முறையாக கடலுக்குள் தத்தி தத்திச் சென்ற குட்டி குட்டி ஆமைகள்!

Watch : முதன் முறையாக கடலுக்குள் தத்தி தத்திச் சென்ற குட்டி குட்டி ஆமைகள்!

Published : Mar 21, 2023, 01:59 PM IST

தனுஷ்கோடி அருகே வனத்துறையினர் பராமரிப்பிலுள்ள ஆமைக்குஞ்சு பொறிப்பகத்திலிருந்து 335 ஆமைக்குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
 

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதிகளில் ஆமை முட்டைகள் திருட்டை தடுக்கும் வண்ணம், வனத்துறை சார்பில் ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அவைகள் குஞ்சு பொறித்ததும் பாதுகாப்பாக கடலில் விடும் பணிகளையும் வனத்துறையின் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு வனத்துறையினர் ஆமைகளின் இனப்பெருக்க காலமான டிசம்பர் 20ம் தேதி முதல் இன்று வரை 127 இடங்களிலிருந்து சுமார் 14,020 முட்டைகளை சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் பாதுகாத்து வருகின்றனர். இதுவரை குஞ்சு பொறித்து வெளிவந்த 2,143 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்
335 ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.

மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?
03:14Vaikasi Amavasai 2024: வைகாசி மாத அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் குவிந்த பக்தர்கள்!
02:38அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
01:55சித்திரை மாத அமாவாசை! முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!
00:58நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!
01:03போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச புத்தகம் வழங்கிய இளைஞர் மன்றத்தினர்
01:48ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து மெய் சிலிர்த்த மக்கள்
02:12மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு
01:52ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
03:53புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்