Watch : தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே கடலை 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி!

Watch : தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே கடலை 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளி!

Published : Apr 15, 2023, 04:22 PM IST

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் என்ற மாற்றுத்திறனாளி, `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலை 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
 

சென்னையை சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்(29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்படாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி இவர், `செரிபரல் பால்ஸி' என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்.
இவரால் பேசவோ, தானே தனது தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது. இருந்த போதும், இவரது பெற்றோர் இவரை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சல் கற்று கொடுக்கத் தொடங்கினர்.
கடந்த 2018-ல் தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர்- புதுச்சேரி 5 கி.மீ. தொலைவை கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக அவருக்கு மத்திய அரசின் சமூக நீதித்துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த முன் மாதிரி இளைஞர் என்ற தேசிய விருதை வழங்கியது. இவ்விருதை அப்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.

இந்நிலையில் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர பாக் நீரிணை கடலை நீந்திக் கடக்க திட்டமிட்டார். மாலை 5.10 மணிக்கு தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கி, 13-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தனுஷ்கோடிக்கு வந்தடைந்தார். தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்தடைந்த சாதனை படைத்த மாற்றுத்திறனாளி ஸ்ரீனிவாசுக்கு அவரது உறவினர்கள் துணை கண்காணிப்பாளர் உமாராணி பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் நகர் மன்ற தலைவர் நாசர்கான் நகர்மன்ற உறுப்பினர்கள் சத்யா முகேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தும் வாழ்த்து தெரிவித்தும் வரவேற்பு அளித்தனர். `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை, நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர் என்ற உல க சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மூன்று நாள் தொடர் விடுமுறை.. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் - இந்த லீவு எதற்காக தெரியுமா?
03:14Vaikasi Amavasai 2024: வைகாசி மாத அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் குவிந்த பக்தர்கள்!
02:38அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
01:55சித்திரை மாத அமாவாசை! முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!
00:58நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!
01:03போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச புத்தகம் வழங்கிய இளைஞர் மன்றத்தினர்
01:48ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து மெய் சிலிர்த்த மக்கள்
02:12மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு
01:52ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
03:53புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்