உதகையில் பாரம்பரிய உடை அணிந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்த தோடர் இன மக்கள்

உதகையில் பாரம்பரிய உடை அணிந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்த தோடர் இன மக்கள்

Published : Dec 27, 2023, 08:16 PM IST

உதையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உதகை பெர்ன்ஹில் பகுதியில் அமைந்துள்ள பவாணீஸ்வரர் திருக்கோவிலின் 112ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோட்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் விழா இன்று நடைப்பெற்றது. ஸ்ரீபவாணீஸ்வரர் கோவிலில் சிவன் கோவில்களில் நடைபெறுவது போல் நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசன விழா, கடந்த 1910ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

இந்த பாவணீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான 112வது ஆருத்ரா மஹோட்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருத்தேர் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. பவாணீஸ்வரர் கோவிலில் இருந்து திருத்தேரை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா வடம் பிடித்து துவக்கி வைத்தார். 

திருதேருக்கு முன்பு நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனம் ஆடி தேரை இழுத்து வந்தனர். உதகை மாரியம்மன் கோவில் பகுதியில் மண்ணின் மைந்தர்கள் என அழைக்கப்படும் தோடர் இன மக்கள் தங்களது கலாசார உடை அணிந்து பாரம்பரிய நடனம் ஆடியதை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். இந்த தேர்திருவிழாவில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்