கூடலூரில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள் கடைகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு

கூடலூரில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள் கடைகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு

Published : Dec 07, 2023, 07:00 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி பஜாரில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை சூரையாடிய சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதியில் அதிகளவு காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் வந்து வீடுகளை உடைப்பது, ரேசன் கடைகளை சேதப்படுத்துவது என அடுத்தடுத்த சம்பவம் நடந்த வண்ணமே உள்ளது. இப்படி  அட்டகாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் விரட்டி விட்டாலும் மீண்டும் ஊருக்குள் வருகிறது.

இந்நிலையில் பந்தலூரை அடுத்துள்ள  சேரம்பாடி பகுதியில் சம்சுதின் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மளிகைக்கடையை நேற்று இரவு ஊருக்குள் உலா வந்த காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. பின்பு கடையில் உள்ள காய்கறி, மளிகை பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தியது. காட்டுயானை உடைக்கும் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூச்சலிட்டு யானையை விரட்டினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்